Winner K Sivakumar
- வகை:சிறப்புப் பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
K Sivakumar எழுதிய வரிகள்:
கல்யாணம் பண்ணிக்காதீங்க. காளைவயதினரே,
கல்யாணம் பண்ணிக்காதீங்க.
அனுபவம் சொல்லித் தந்த
வாழ்க்கைப்பாடம் இதுதானுங்க.
சரணம்1
ஆளை மயக்கி ஆசைகள் வளர்த்தி
ஆயுள் வரைக்
கைதியாய் ஆக்குமுங்க.
நாளும் பொழுதும் நாடகம் நடத்தி
தேடும் நிம்மதி
யாவையும் போக்குமுங்க.
தாலி யென்னும் வேலி இட்டு
தனிப்பட்ட எண்ணங்களை
வேருடன் வீழ்த்துமுங்க.
சொந்தம் பந்தம் சுற்றங்கள் என்னும்
சுழலினில் வீழ்த்தி சோகத்தில் ஆழ்த்துமுங்க.
(கல்யாணம்)
சரணம்2.
பிள்ளைகளென்றும் பெரியவர்களென்றும்
குடும்பத்தைப் பெருக்கி
காசுகளைக் கரைக்குமுங்க.
தொல்லைகளைத் துயரங்களைத்
தொடர்கதை ஆக்கியே
வாழ்வினை கெடுக்குமுங்க.
தனி மனித சுதந்திரம்
பறிபோகும் மனநிலை
தினம் தினம் கொடுக்குமுங்க.
மனப்பொருத்தம் கெடுத்து
மன அழுத்தம் கொடுத்து
மயானத்தில் முடிக்குமுங்க.
(கல்யாணம்)
கல்யாணம் பண்ணிக்காதீங்க.
அனுபவம் சொல்லித் தந்த
வாழ்க்கைப்பாடம் இதுதானுங்க.
சரணம்1
ஆளை மயக்கி ஆசைகள் வளர்த்தி
ஆயுள் வரைக்
கைதியாய் ஆக்குமுங்க.
நாளும் பொழுதும் நாடகம் நடத்தி
தேடும் நிம்மதி
யாவையும் போக்குமுங்க.
தாலி யென்னும் வேலி இட்டு
தனிப்பட்ட எண்ணங்களை
வேருடன் வீழ்த்துமுங்க.
சொந்தம் பந்தம் சுற்றங்கள் என்னும்
சுழலினில் வீழ்த்தி சோகத்தில் ஆழ்த்துமுங்க.
(கல்யாணம்)
சரணம்2.
பிள்ளைகளென்றும் பெரியவர்களென்றும்
குடும்பத்தைப் பெருக்கி
காசுகளைக் கரைக்குமுங்க.
தொல்லைகளைத் துயரங்களைத்
தொடர்கதை ஆக்கியே
வாழ்வினை கெடுக்குமுங்க.
தனி மனித சுதந்திரம்
பறிபோகும் மனநிலை
தினம் தினம் கொடுக்குமுங்க.
மனப்பொருத்தம் கெடுத்து
மன அழுத்தம் கொடுத்து
மயானத்தில் முடிக்குமுங்க.
(கல்யாணம்)
